Sunday, August 31, 2008

மின்சார விடுமுறை

மின் தடை, மின்வெட்டு, மின்சார விடுமுறை. எத்தனை வார்த்தைகள் ஆனா அர்த்தம் எல்லாம் ஒன்னு தான்.
பள்ளிக்கூடம் போற வயசுல கரண்ட் போனா எவ்வளவு சந்தோசம். கரண்ட் போன ஒடனே "எனக்கு படிக்க வேண்டியது எவ்வளவு இருக்கு. பாவிபசங்க கரண்ட கட் ப்ண்ணிடாங்களே."-ன்னு பில்டப் கொடுத்துட்டு ஊர்மேய கெளம்பிடுவோம். இருட்ல, தெருல மேற்குலேந்து கெழக்குபாத்து பேய் மாதிரி ஒடுவோம். ஒரு தடவ கண்ணாம்பூச்சி விளையாடி, ஒரு ஆட்டோமேல மோதி, அந்த டிரைவருக்கு யாருன்னு தெரியாம மண்ட காஞ்சுபோச்சு. எம்புட்டு சந்தோசம்.
நம்ம சந்தோசமா இருந்தா பொறுக்காதே. என்னவோ Emergency Light-டாம்ல ('எமன்'ஜெர்சி லைட்டு) அத வாங்கிட்டாக. கரண்ட் போனானும் அதுல போகாதுல்ல.(மொதல்ல கரண்ட் போனாலும் வேல செய்யர டி.வி. வாங்கனும்.) ஆட்டம் பாட்டமெல்லாம் நின்னுபோச்சு. இப்போ நிலைம மாறிப்போச்சு.
இப்போ கரண்ட் போனா, மெகா சீரியல் போச்சேன்னு பெரியவங்க ரொம்ப வருத்தப்படறாங்க. இவ்வளவுக்கும், அந்த சீரியல்ல, ஊர் உலகத்துலே ஒரு ரொம்ப நல்ல பொண்ணு நாலே நாலு வார்த்தபேசும்.
இந்த தடவ நெலம ரொம்ப மோசம். மின்சார விடுமுறைனா சும்மவா. ஒரு நாளைக்கு அஞ்சாறு மணிநேரம் கரண்ட இருக்கிறதில்ல. விட்டுக்கு நல்ல தண்ணி வரதில்லை. கடைல இட்லி வாங்கப்போனா, சட்னி இல்லை. ஏன்னா, கரண்ட் இல்ல. கடைல வருமானமும் இல்ல. மக்களுக்கு சந்தோசமும் இல்ல.
ஆனா, மெயின் ரோட்ல ஆடிக்கழிவு விளம்பரம் மட்டும் பிரகாசமா இருக்கு. ஏழைங்க வாழ்க்கை எப்போ பிரகாசமாகுமோ?