Saturday, April 18, 2009

மக்களாகிய நாம்...


புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு
மாறவில்லை - நம்
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லை.
இது நாடா, இல்லை வெறும் காடா? - இதைக்
கேட்க யாரும் இல்லை தோழா...



கவிஞர் புலமைப்பித்தன்
உன்னால் முடியும் தம்பி (1988)
----------------------------------------------------------------------------------


இந்தப் பாடல் எழுதப்பட்டு இருபது வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும், இந்தஇருபது ஆண்டுகளில் மேலே கூறப்பட்ட நிலைமையில் எந்த மாற்றமும்இல்லை. பஞ்சமும் பசியும் சாராயமும் ஒன்றை ஓன்று விஞ்சி வளர்ந்துகொண்டிருக்கின்றன. யானை கொண்டு போர் அடித்த நாட்டில் இன்று, பசிவயிற்றில் அடிக்கிறது. பகத்சிங்கும் வாஞ்சிநாதனும் போராடி விழுந்த இடத்தில், எழுந்தவர்கள் எல்லாம் சாராயக் கடையில் சுதந்திரம் வளர்க்கிறார். நீதி ஆண்டஇடத்தில், சாதி ஆள்கிறது. இவையெல்லாம் கேடு விளைவிக்கும் என்பதுஅனைவருக்கும் தெரியும். ஆனால், இவற்றின் விளைவுகள் எத்தகயது என்றவிவரங்களும் அவற்றை தீர்க்க வேண்டிய செயல்பாடுகளும் சாதாரனமக்களுக்குத் தெரியாது. இவை தெரியாமல் அவர்களால் பிரச்சனைகளின்தீவிரத்தை உணர முடியாது. எத்தனை மக்களுக்கு பிரச்சனைகளின் தீவிரம்உணர்த்தப்படுகிறதோ, அத்தனை சீக்கிரம் அவை விலகும்.


அரசியல் கட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப அறிக்கைகளின் மூலம் பொய்மூட்டைகளையே கட்டவிழ்த்துவிடுகின்றன. ஊடகங்களும் பெரும்பாலும் ஒருசார்பு நிலையையே எடுக்கின்றன. நிலைமை இப்படி இருக்கையில், மக்கள்பிரச்சனைகளைப் பற்றி ஒருவர் கட்டுரைகள் எழுதிவருகிறார். அவர், அ.கி.வேங்கட சுப்ரமணியன். இவர், ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. வேங்கடசுப்ரமணியன் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து, மக்களாகிய நாம் என்னும்தலைப்பில் ஒரு நூலாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


மொத்தம் 28 கட்டுரைகள்; குடியாட்சி, உள்ளாட்சி, கல்வி, வாழ்க்கை என்னும்நான்கு தலைப்புகளில் பகுக்கப்பட்டுள்ளன.


குடியாட்சி:

இந்தப் பகுப்பில் உள்ள கட்டுரைகளில் எழுத்தாளர், சமத்துவம், மது விலக்கு, விவசாயம், காவல்துறை போன்றவற்றின் தற்போதய நிலைமையைப் பற்றியும்அவற்றை சீர்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிகளையும் விரிவாகக்கூறியுள்ளார். பெரும்பாலான கட்டுரைகளில் மகாகவி பாரதியாரின் கவிதைளைபயன்படுத்தியதோடு நில்லாமல், 'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமா?' என்ற கட்டுரையில் பாரதியாரின் சுதந்திரப் பள்ளுவையும் நமது தற்காலநிலையையும் ஒப்பிட்டுள்ளார்.


யாருக்கு வரவு? யாருக்கு செலவு? என்ற கட்டுரை, கண்டிப்பாக படிக்க வேண்டியஒன்று. சாதாரணமாக அனைவருக்கும் புரியும்படி, விவசாயிகள் எந்த அளவிற்குபாதிக்கப்பட்டுள்ளனர் என்று விளக்கியுள்ளார். அரசின் வருமானம், அரசுஊழியர்களின் வருமானம், பியட் காரின் விலை போன்றவை பல மடங்குஅதிகரித்த போதும் விவசாயப் பொருட்களின் விலை அந்த அளவிற்குஉயரவில்லை. இதற்கு காரணம், மற்ற துறைகளைப் போல் விவசாயத்திற்குபோதிய அளவு அரசாங்கம் கட்டமைப்புகளை மேம்படுத்தாததே காரணம்- இவையே விவசாயிகளின் வறுமைக்குக் காரணம்.


உள்ளாட்சி:


ஊராட்சிகள் ஈட்டியின் கூர்முனைகள் என்று குறிப்பிட்டுள்ள வேங்கடசுப்ரமணியன், அவற்றைக் கொண்டு சிறப்பான நிர்வாகத்தைத் தர முடியும் என்றுகூறுகிறார். உள்ளாட்சிகளில் கட்சிகள் தேவையே இல்லை என்பதே இவர் வாதம். கட்சிகளின் தலையீடு இல்லாமல், நேர்மை, திறமை, எளிமை, துணிவு கொண்டஒரு குடிமகனையே உள்ளாட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், கட்சிகளின் பதவி வெறி உள்ளாட்சி அமைப்புகள் வரை படர்ந்துள்ளது குறித்துகவலையும் தெரிவித்துள்ளார்.


கடந்த இரு ஆட்சிகளிலும் மாநகராட்சித் தேர்தல்களில் நடந்த வன்முறைகள்பற்றி சில கட்டுரைகள் எழுதியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் என்பது, சட்டமன்றதேர்தல்களில் போட்டியிட்டு தோற்றவர்கள் தங்கள் மானத்தை மீட்கவும், சிலகைத்தடிகள் கட்சித்தலைமையிடம் நல்ல(?) பெயர் வாங்கவும், ஆளும் கட்சிதனது கொடுரமான முகத்தைக் காட்டவுமே நடத்தப்படுகிறது. 2007-ம் ஆண்டுசென்னை மாநகராட்சியில் 99 வார்டுகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்மறுதேர்தல் நடந்தது. மாநகராட்சி சார்பில், மக்களை பயமின்றி வாக்களிகக்கோரி, தேர்தல் நாளன்று அறிவுப்பு செய்த போதும் கூட 30% வாக்குகளேபதிவானது. அரசியல் கட்சிகளின் இந்த கொடுர நோக்கத்தால் மக்கள் நம்பிக்கைஇழக்கும் அபாயத்தை இந்த கட்டுரைகள் சுட்டுகின்றன.


மக்களுக்கு நெருக்கமான நிலையில் உள்ள போதும், உள்ளாட்சி அமைப்புகளுக்குஅதிகாரங்கள் மிகவும் குறைவு. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும்கையோடு சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முயற்சி செய்யும் போதே உள்ளாட்சிஅமைப்புகளின் நிலைமை புரிந்திருக்கும். உள்ளாட்சி அமைப்புகளின்அதிகாரங்களை படிப்படியாக உயர்த்துவதன் மூலமே மக்களுக்கு சிறந்தநிர்வாகத்தின் பயனை அளிக்க முடியும்.


கல்வி:


அனைவருக்கும் கல்வி அளிப்பதில் உள்ள பிரச்சனைகள் இத்தொகுதியில்ஆராயப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது கல்வி வரி பற்றியது. இப்படி ஒரு வரிஇருப்பது பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த போதும், அவை கல்விக்காகச்செலவழிக்கப்படுகிறதா? என்று நாம் சிந்தித்த்துண்டா? அதைப் பற்றி இருகட்டுரைகளில் விரிவாகக் கூறியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும்கல்வி வரிகள், தொடக்கக் கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டியவை. ஆனால் அவை தொடக்கக் கல்விக்காக பயன்படுத்தப்படவில்லை என்பதைதகவல் அறியும் சட்டம் மூலமாகவே எழுத்தாளர் அறிந்துள்ளார். இதைப் பற்றிநாம் யோசனை செய்வதே இல்லை. இந்தப் போக்கு மாற வேண்டும். நாம்செலுத்தும் வரிகள் சரியான நோக்கத்திற்கு பயன்படுகிறதா? என்றுகண்காணிப்பதும் நமது கடமை தான்.


தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா? என்ற கட்டுரையில் நுழைவுத் தேர்வுரத்து செய்வதால் மட்டுமே கிராமப்புற மாணவர்களுக்கு பொறியியல் மற்றும்மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காது என்பதை புள்ளிவிபரங்கள் மூலம்விளக்கியுள்ளார். கிராமப்புற பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாகஇருப்பதால், அவர்களின் மேற்ப்படிப்பே கேள்விக்குறியாக இருப்பதே உண்மை. ஆனால், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளாமல், நுழைவுத்தேர்வை மட்டும் ரத்து செய்வது, ஒரு பயனையும் தராது என்பதே வேங்கடசுப்ரமணியன் அவர்களின் கருத்து.

வாழ்க்கை:


இதில், நெலசன் மண்டேலாவின் வாழ்க்கையை சில பக்கங்களில் தந்துள்ளார்எழுத்தாளர். சில பக்கங்களே ஆனாலும் கூட அவர் வாழ்க்கை முழுதும்கட்டுரையில் தந்திருப்பது, வேங்கட சுப்ரமணியன் அவர்களின் எழுத்துத் திறனின்மேன்மையைக் காட்டுகிறது.

புத்தக விபரங்கள்:








தலைப்பு: மக்களாகிய நாம்… எழுத்தாளர்: அ.கி. வேங்கடசுப்ரமணியன் பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் விலை: ரூ.100/-
மேலும் விபரங்களுக்கு...



பத்ரிக்கு ஒரு வேண்டுகோள்: இப்புத்தகத்தை மலிவு விலைப் பதிப்பிலும் வெளியிட்டால் , இக்கருத்துக்கள் அதிகமான மக்களிடம் போய்ச்சேரும்.