Sunday, March 7, 2010

நீங்க பள்ளிகூடத்துக்கு போகும்போது அழுதிருக்கீங்களா?


நீங்க பள்ளிகூடத்துக்கு போகும்போது அழுதிருக்கீங்களா?
நான் ரொம்ப அழுத்தில்ல.
இன்னிக்கி காலேல ஒரு குட்டி பொண்ணு அழுதுட்டே பள்ளிக்கூடத்துக்குப் போச்சு. கூடவே ஒரு அம்மா ஒரு குச்சியோட; அடி விழுந்துறுக்கும்ன்னு நெனக்கிறேன். 
அனேகமா எல்லா குழந்தைக்கும் பள்ளிக்கூடம் பிடிக்கறதில்ல. என் அண்ணா பையன் பள்ளிக்கூடம் போகாம இருக்க என்னென்னமோ காரணம் சொல்லரான்.
எங்க வீட்ல நான் நல்லா படிக்கனும்னு ஆசை. ஏதோ என்னால முடிஞ்சவரைக்கும் படிச்சேன். எட்டு மணிநேரம் காத மட்டும் திறந்துவச்சுட்டு ஒக்காந்திருக்கனும். வரலாறு, அறிவியல், புவியியல் என்னென்னமோ மாறி மாறி வரும். எனக்கு கணக்கு மட்டும் தான் பிடிக்கும். பன்னிரென்டாம் வகுப்புலேந்து கல்லூரி வரைக்கும் புடிக்காத பாடம்னா தூங்கிடுவேன். ஆட்டு மூளை, தவளை இதயம்; இதெல்லாம் எதுக்கு படிக்கறேன்னு தெரியாமலெயெ படிச்சாச்சு.
பள்ளிக்கூடம் ஜெயில் மாதிரிதான்; என்ன மேஜை, கரும்பலகை, மாணவர்கள்(கைதிகள்), ஆசிரியர்(காவலர்) இதெல்லாம் இருக்கும். யோசிக்கவும் மாட்டாங்க, யோசிக்கவிடவும் மாட்டாங்க. அச்சிட்டதெல்லாம் உண்மை; ஆசிரியர் சொன்னா எல்லாமே சரி; ரெட்டகோடு நோட்ல பக்கம் பக்கமா எழுதனும் (எவ்வளவு எழுதியும் என் கையெழுத்து மாறவேயில்ல).
பேசக்கூடாது, சிரிக்ககூடாது, புன்னகைக்க கூடாது; இதெல்லாம் ரொம்ப தப்பு. தப்புபண்ணினா பிரம்பு பிஞ்சிரும். நான் சிரிச்சதுக்கெல்லாம் அடி வாங்கியிருக்கேன். லீடருக்கு உங்கள புடிக்கலைனா அவன் வேற போட்டுக்கொடுப்பான்.
பள்ளியில் ரொம்ப மோசமானது ஒப்பிடுதல். நம்மள எல்லாத்தோடும் எல்லாரோடும் ஒப்பிடுவாங்க. நீ குள்ளமா இருக்க; குண்டா இருக்க; நீ முட்டாள்; அவன் புத்திசாலி. சம்பந்தமே இல்லமா ஒப்பிடிவாங்க; சச்சினையும் உசேன் போல்டையும் ஒப்பிடற மாதிரி முட்டாள்தனம்தான் பள்ளியில நடக்குது.
உங்களுக்கு பள்ளியப் பத்தி சுகமான ஞாபகங்கள் இருக்கலாம். என்னோட பள்ளிப்பருவத்தில நான் அனுபவிச்சது ரொம்ப கம்மிதான். அந்த பருவத்தில குறுக்கப்பட்ட எண்ணங்களை மாற்றுவது கஷ்டமா இருக்கு. பள்ளிக்கூட நண்பர்கள் யாருடனும் இப்போ தொடர்பு அவ்வளவா இல்லாதது வருத்தமா இருக்கு.
பள்ளிக்கூடத்துக்கு போய்த்தான் கத்துக்கனும் ஒன்னும் இல்ல. உங்க குழந்தைகள் பள்ளிக்கு போக விரும்பலென்னா தயவுசெஞ்சு கட்டாயப் படுத்தாதீங்க.
வாழ்க்க நெறிய கத்துக்கொடுக்கும்...