Tuesday, September 27, 2011

சேனைப் புழுக்கு

குறிப்பு: விளையாட்டாக சில வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் இப்படியொரு பதார்த்தம் உண்டு என்பதை தயவு செய்து நம்பிவிடுங்கள். 

தேவையான பொருள்கள்:
  • சேனைக் கிழங்கு - 250 கிராம்
  • தட்டப்பயறு      - 100 கிராம்
  • பச்சை மிளகாய்  - 3
  • தேங்காய்        - கொஞ்சம் (துருவியது)
  • உப்பு            - தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் - இரண்டு டீ ஸ்பூன் 

சமையல் குறிப்பு template படி இந்த இடத்தில் புழுக்கு செய்த பின் எடுத்த புகைப்படம் வரவேண்டும். என்னிடம் புகைப்படம் இல்லை. வழக்கமாக நான் கேட்டுவிட்டு திருடி எடுத்துப் போடும் இடத்திலும் இந்தப் படம் இல்லை. (அது சரி! அங்கிருந்தால் நான் ஏன் இதை எழுதிக் கொண்டிருக்கப்போகிறேன்.)

செய்முறை:
  • சேனைக்கிழங்கை சின்னச் சின்ன கன சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்
  • சேனைக்கிழங்கையும் தட்டைப்பயிரையும் கூக்கரில் வைத்து சேர்த்தோ அல்லது தனித்தனியாகவோ உப்பு சேர்த்து வெந்து கொள்ளவும். (கொஞ்சம் குழைவாகவே வெந்து கொள்ளலாம். இல்லையென்றால் சேனை செமிக்க கடினமாக இருக்கும்.)
  • பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும்
  • ஒரு கனத்த பாத்திரத்தில் தேங்காய் எண்ணை விட்டு பின்,  வேகவைத்த கிழங்கையும் பயறுயும் போட்டு கிண்ட வேண்டும். 
  • இதேடு வகுந்து வைத்த பச்சை மிளகாயையும் சேர்த்து கிண்டவும். 
  • பிறகு பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி தேங்காய்த் துருவலை சேர்க்கவும்.
* சேனை நாக்கை அரிக்கலாம். நாக்கை பல்லில் சொறிந்து கொள்வதைத் தவிர வேறேதும் வழியில்லை.


மேட்ச் ஃபிக்சிங் கார்னர்: 
பருப்பு ரசம், எலுமிச்சை ரசத்திற்கு இது நன்றாக இருக்கும். கொஞ்சம் காரமாக செய்தால் தயிர்சாத்ததிற்கும் சேர்த்துக் கொண்டு சாப்பிடலாம். 


தொடர்புள்ள சுட்டிகள்:
@jsrigovind
@losangelesram



2 comments:

  1. அருமையான பதிவு. பச்சை மிளகாயை வகுந்து கொள்ள வேண்டும், சேனையை சிறிய ஆனால் கனமான சதுரங்களாக வேட்டி கூக்கரில் குழைவாக வெந்து கொண்டு சேமிக்க வேண்டும் என்றெல்லாம் ரொம்ப பின் நவீனத்துவ ரெசிப்பி கொடுத்திருக்கிறீர்கள், இந்த மாதிரி நான் படித்ததே இல்லை.

    அடுத்து மல்லிகைப்பூ இட்லி செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுங்கள். எத்தனையோ கடைகளில் சாப்பிட்டு விட்டேன், அந்த மணம் எல்லாவற்றிலும் மிஸ்ஸிங்.

    ReplyDelete
  2. எனக்கு ரொம்ப பிடித்த பதார்த்தம் சார் இது.

    மல்லிகைப்பூ இட்லி தானே கண்டுபிடித்துவிட்டால் போகிறது :-)

    ReplyDelete